கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • எனது அறிமுகம்
  • கவிதைகள்
  • ஆசிரிய நூல்கள்
  • தொடர்பு
  • இயற்கையதன் மகிமை என்னே!

    January 11, 2026
    கவிதைகள்

    மஞ்சள் வண்ண மழைத்துளியாய் மண்மீது பொழிந்திருக்கும் வேங்கைமர மலர்களதன் விஞ்சிநிற்கும் அழகு என்னே! மேகமது சூழ்ந்திடவே தேகமதும் குளிர்ந்துவிடும்! மேதினியும் செழிப்புறவே மேன்மையது நிறைந்துவிடும்! தென்றலது தவழ்ந்துவந்து தெம்மாங்கு இசைத்திடவே தேனிசை செவிகளிலே தீஞ்சுவையைச் சேர்த்துவிடும்! வான்மழையும் வருகைதர வையமிதில் வளம்பெருகும்! வாடிநிற்கும் உயிர்களதன் வாட்டமது மறைந்துவிடும்! பாடிவரும் பூங்குயிலும் பச்சைவண்ண மரங்களுமே இச்சைகொள்ளத் தூண்டுதம்மா! இயற்கையதன் மகிமை என்னே!

  • மனதினில் துயரதை மறைத்துவிடு!

    January 11, 2026
    கவிதைகள்

    மனதினில் துயரதை மறைத்துவிடு! மண்ணில் இயற்கையை நினைத்துவிடு! தினம் ஒரு புதுமை நிகழ்த்திடும் இயற்கையில் திளைத்திடவே உளம் களித்துவிடு! கிழக்கே உதித்திடும் சூரியனே விலக்கிட இருளதும் போய்விடுமே! கிழமைகள் தோறும் நலமதுபுரிய விளைந்திடும் துன்பம் நீங்கிடுமே! மழையதும் மண்ணில் பொழிந்திடவே மாநிலம் எங்கும் தழைத்திடுமே! மனிதரும் உழைப்பால் உயர்ந்திட வாழ்வில் மனமதில் இன்பம் விளைத்திடுமே! வனமதில் தாவரம் செழித்திடவே வையம் எங்கும் வளம்பெறுமே! வாய்மையைக் காத்து வாழ்ந்திட உலகே வரும் பொருளதுவால் நலம்பெறுமே! (கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு-பாடல்…

  • வரைமுகடோ நெடிதுயர்ந்து வானகத்தைத் தழுவும்!

    January 11, 2026
    கவிதைகள்

    வரைமுகடோ நெடிதுயர்ந்து வானகத்தைத் தழுவும்! வான்மகளோ நாணிடவே மேல்சேலை நழுவும்! மேகமெனும் வாகனத்தில் ஊர்வலமே நடக்கும்! மேனியதும் குளிர்ந்திடவே தேன்மழையே வடிக்கும்! மனம்குளிர வானகமே மாமழையே பொழியும்! மண்ணகமே மனம்மகிழ பொன்னதுவே விளையும்! வையகத்து உயிரனைத்தும் வானகத்தை வணங்கும்! வான்மழையின் பரிசமதால் பூமியதே சிணுங்கும்! தாவரமே வரமதுவாய் வரைகளிலே செழிக்கும்! தரணியிதே அதுவழங்கும் வளமதுவால் கொழிக்கும்! தன்னலமே பேணாத தகைமையதால் மிளிரும்! தான்வழங்கும் கொடையதுவால் மன்பதையில் ஒளிரும்! மலைகளதே மன்பதைக்கு அணிகலனாய் விளங்கும்! மழைவளமும் மண்வளமும் வாரியென்றும்…

  • வயலில் செந்நெல் முற்றி தலை சாய்த்து ஆடுதே!

    January 11, 2026
    கவிதைகள்

    வயலில் செந்நெல் முற்றி தலை சாய்த்து ஆடுதே! வாகையும் பூவரசும் கரையில் பூத்து ஆடுதே! வண்டு பூவில் தேனதனை ருசித்து சுவைக்குதே! வரப்பில் நண்டு வளையின் சேற்றை ஏற்றி அடைக்குதே! கிணற்று நீரும் கரையில் மோதி அலை அடிக்குதே! கெண்டை கெழுத்தி உவகையதால் துள்ளிக் குதிக்குதே! கிளிகளதும் சிறகடித்துப் பாடிப் பறக்குதே! கிழக்கு திசையினிலே சூரியனும் மெள்ள உதிக்குதே! உழவரது உள்ளமெலாம் துள்ளிக் களிக்குதே! ஓடையிலே ஓடும் நீரும் சல சலக்குதே! பனிமலரும் இதழ்விரித்து மணம் பரப்புதே!…

  • வானம் முரசறைந்து வரவேற்கும்!

    January 11, 2026
    கவிதைகள்

    வானம் முரசறைந்து வரவேற்கும்! வண்டுகள் இசைபாடி சுகம்சேர்க்கும்! கானம் அதுஉள்ளம் தனைஈர்க்கும்! காலம் எந்நாளும் நமை ஏற்கும்! நதிகள் பெருக்கெடுத்து நலம்பயக்கும்! நானில உயிர்களதும் மனம்உவக்கும்! நாளும் நன்னெறியே எமைஇயக்கும்! நாடே நலமுறவே கைசிவக்கும்! வனங்கள் செழிப்புறவே வளம் நிறையும்! வறுமை துயரதுவும் தான் குறையும்! வையம்தனில் உயிர்கள் தினம் மகிழும்! வாய்மை நமதாக இடர் மறையும்! ஏர்முனை சீர்பெறவே இனிதாகும்! நேர்மை வழியதுவால் நலம் சேரும்! ஊரார் போற்றும் நிலை உருவாகும்! உலகே பின்தொடரும் நிலையாகும்!

  • பொங்கிவரும் கடல் அலையாய்!

    January 11, 2026
    கவிதைகள்

    பொங்கிவரும் கடல் அலையாய் பங்கயத்தின் இதழ் அழகாய் தெங்கதனின் இனிமையதாய் தென்றலதன் குளிர்மையதாய் எங்கும் நிறை இயற்கை உனைக் கண்டேன்! -என் இதயமதில் உனை நினைந்து நின்றேன்! நினைந்து நின்றேன்! வானுயர்ந்த வரைகளதாய் வண்டுலவும் சோலையதாய் வண்டமிழின் செழுமையதாய் வண்ணமலர் நறுமணமாய் வையமெங்கும் இயற்கை உனைக் கண்டேன்! -உன் வளமையதில் எனைமறந்து நின்றேன்! மறந்து நின்றேன்! மாங்குயிலின் தேனிசையாய் மங்கையவர் தளிர்நடையாய் மேகமதன் மழையதுவாய் மென்காற்று தரும்சுகமாய் மேதினியில் இயற்கை உனைக் கண்டேன்! -உன் மேன்மையதில் உளம்…

  • இயற்கை அன்னையின் எழில் கோலம்!

    January 11, 2026
    கவிதைகள்

    இயற்கை அன்னையின் எழில் கோலம்! -அதன் இயல்பால் இயங்கிடுமே ஞாலம்! செயற்கையதால் வரும் அலங்கோலம்! -அதை சிந்தையில் கொள்வதுவே ஞானம்! பூமியில் வாழ்வது பெரும் பேறே! -இதைப் புரிந்திட நேர்ந்திடும் மிகுசீரே! சாமியை வேண்டிட நலமாகும்! -வரும் சஞ்சலம் தீர்ந்திட மகிழ்வாகும்! இயற்கையைப் பேணிட இனிதாகும்! -அதில் இன்பம் அதுவே உருவாகும்! இம்மை வாழ்வினில் வளம்மேவ! -எங்கும் இயைதல் நேர்ந்திட இருள் போகும்! இயற்கையின் மகிமை அறியாமல்! -வரும் இன்னல் எதுவும் புரியாமல்! இழிமன மாந்தரின் செயலதுவால்-இங்கு…

  • மாங்குயில் கூவும் குரலோசை!

    January 11, 2026
    கவிதைகள்

    மாங்குயில் கூவும் குரலோசை! மன ஆறுதல் வழங்கும் குயிலோசை! பாங்குடன் வாழும் மனிதர் நெஞ்சில் பாசத்தைப் பொழியும் குயிலோசை!  -இது படைத்தவன் நடத்தும் இசையாகம்! -நல்ல பண்புடையார்க்கே இது யோகம்! காதலர் நெஞ்சில் கண்ணியம் வளர்க்கும் கானமழையே குயிலோசை! -உள்ளம் கனிந்திடவே எங்கும் தண்ணளி வழங்கும் கருணைமழையே குயிலோசை! -இது கடவுள் நடத்தும் இசையாகம்! -நெஞ்சில் கனிவுடையார்க்கே இது யோகம்! இனியவை எங்கும் நிகழ்ந்திட வேண்டி இசைத்திடும் இசையே குயிலோசை!  இன்னல் களைந்து இன்பம் சேர்த்திடும் இன்னிசை…

  • கண்கோடி வேண்டுமடி கானமயிலே!

    January 11, 2026
    கவிதைகள்

    கண்கோடி வேண்டுமடி கானமயிலே! -அழகு கானகத்தை ரசித்திடவே கானமயிலே! கனிகள் நிறைமரங்கள்! களித்திடும் உயிரினங்கள்! கண்டவர் கண்மயங்கும் கானமயிலே! தென்றல் தவழ்ந்திருக்கும் தேனாறு பாய்ந்திருக்கும் தென்பொதிகை சந்தனமே கானமயிலே! -அரிய திரவியமே தந்திடுமே கானமயிலே! அருவி சலசலக்கும் ஆற்றோரம் செழித்திருக்கும் ஆனந்தத் தாண்டவமே கானமயிலே! -அங்கே அமுதே பொழிந்திருக்கும் கானமயிலே! பசுந்தளிர் செடி கொடிகள் பாடிடும் புள்ளினங்கள் பார்வையில் ஈர்த்திடுமே கானமயிலே! -எங்கும் பசுமையதே பாய்விரிக்கும் கானமயிலே! உலகினர் உய்த்திடவே உயிர்நீர் உவந்திடுமே! உணவும் உடைவழங்கும் கானமயிலே!…

  • வழங்கிடும் உயிர்நீர் மழையதுவே!

    January 10, 2026
    கவிதைகள்

    விசும்பின் துளியது மண்ணிடை வீழ்ந்தால் வேண்டுவதெல்லாம் நலமாகும்! வினைப்பயன் அதுவே மறைந்திட ஆங்கே வெற்றியே நமது வரவாகும்! வெள்ளை உள்ளம்! பிள்ளை குணமே! விரும்பிடும் யாவையும் நமதாகும்! மாக்கடல் அதனின் மகிமையும் குன்றும் மழையதும் மண்ணில் தவறிடவே! மானம் தானம் தவமது யாவும் மறைந்திடும் ஆங்கே மழை இலையேல்! மக்கள் மாக்கள் மகிழ்ந்திட உலகில் மழையதுவே என்றும் பெருந்துணையாம்! வானது வழங்கும் வரம் அதுவாலே வையம் இங்கே தழைத்திடுதே! வரமதை வழங்கும் தகைமையினாலே மழையதுவே என்றும் அமிழ்தமதே!…

Previous Page
1 2 3 4 5 … 12
Next Page
கவிஞர் சோலை எழிலன்

கவிஞர் சோலை எழிலன்

  • Instagram
  • Facebook
  • X

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by