மாங்குயில் கூவும் குரலோசை!

மன ஆறுதல் வழங்கும் குயிலோசை!

பாங்குடன் வாழும் மனிதர் நெஞ்சில்

பாசத்தைப் பொழியும் குயிலோசை!  -இது

படைத்தவன் நடத்தும் இசையாகம்! -நல்ல

பண்புடையார்க்கே இது யோகம்!

காதலர் நெஞ்சில் கண்ணியம் வளர்க்கும்

கானமழையே குயிலோசை! -உள்ளம்

கனிந்திடவே எங்கும் தண்ணளி வழங்கும்

கருணைமழையே குயிலோசை! -இது

கடவுள் நடத்தும் இசையாகம்! -நெஞ்சில்

கனிவுடையார்க்கே இது யோகம்!

இனியவை எங்கும் நிகழ்ந்திட வேண்டி

இசைத்திடும் இசையே குயிலோசை! 

இன்னல் களைந்து இன்பம் சேர்த்திடும்

இன்னிசை மழையே குயிலோசை! -இது

இறைவன் நடத்தும் இசையாகம்! -நல்

இயல்புடையார்க்கே இது யோகம்!

(தேவன் கோவில் மணி ஓசை-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *