அழகான எழில் சூழ்ந்த மலைச்சாரலில்-உந்தன்

அருள் பொங்கும் முகம்தன்னை நான் காண்கிறேன்!

அமுதன்ன உயிர்நீரைத் தான்தந்திடும்-உந்தன்

அன்பிற்கு ஈடிங்கு இணையே இல்லை!

மழைமேகம் உன்மீது நடமாடிடும் -அந்த

மகத்தான தருணத்தில் நிலை மாறினேன்!

மாறாத உன் அழகில் தான் மயங்கியே-உந்தன்

மடிமீது தலைவைக்க உளம் நாடினேன்!

மலையென்றும் வனமென்றும் உன்மேனியில் -ஒரு

மாக்கோலம் உருவாக எழில் சூழ்ந்திடும்!

மழைபெய்து உன்மேனி நீர்சூழ்ந்திட -மண்ணில்

மனம்கவரும் உயிரினங்கள் தான் தோன்றிடும்!

கடல் வானும் கனிவாக உன்தோற்றமே -ஒரு

கருத்தான வடிவாக எழில் கூடுமே!

கலைமிக்க எழில்சோலை உனைச் சேர்ந்திட -எங்கும்

கண்கவரும் புதுக்கோலம் தான்மேவுமே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *