பொன்னி நதி கரைபுரள புதுமலர் மணம் கமழ
பொங்கிடவே நுரை ததும்பி வந்தாள்!-இந்தப்
பூவுலகில் நலம் நிறைத்து நின்றாள்!
நிறைத்து நின்றாள்!
தருக்கள் தலை அசைக்க தவளைகள் இசை முழக்க
தளிர்க் கரத்தால் கரை தழுவி வந்தாள்!-இந்தத்
தரணியிலே வளம் பெருக வந்தாள்!
பெருக வந்தாள்!
மக்களவர் மனம் மகிழ மங்கையர்கள் முகம் மலர
மங்கலமாய் நீர் சுமந்து வந்தாள்!-இந்த
மாநிலமே மாட்சி பெற வந்தாள்!
பெற வந்தாள்!
மலையது உளம் குளிர கடலதும் உடல் நனைய
மகிமையுடன் நடை பயின்று வந்தாள்!-இங்கே
மண்ணுயிர்கள் தழைத்திடவே வந்தாள்!
தழைத்திட வந்தாள்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply