புன்னை மரம் பூச்சொரிய பூங்குருவி இசைபயில
பொன்னொளிரும் ஆதவனைக் கண்டேன்!-அந்தப்
பொன்னெழிலில் எனை மறந்து நின்றேன்!
மறந்து நின்றேன்!
தேக்கு மரம் தலை அசைய தென்றலது தோள் தழுவ
தேன்மழையில் உடல் நனைந்து நின்றேன்!-என்
தேகமெல்லாம் புது சுகத்தைக் கண்டேன்!
சுகத்தைக் கண்டேன்!
வேங்கை மலர் இதழ் விரிய வெய்யோனின் கதிர் ஒளிர
வெண்மேகம் குடைபிடிக்கக் கண்டேன்!-கொடும்
வெயிலினின்றும் நான் ஒதுங்கி நின்றேன்!
ஒதுங்கி நின்றேன்!
அருவிகள் பொழிந்திருக்க ஆகாயம் கருத்திருக்க
ஆனந்தம் நான் மிகவும் கொண்டேன்!-மேவும்
ஆசையதால் கண் மயங்கி நின்றேன்!
மயங்கி நின்றேன்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply