தென்றலது உடல் தழுவ தேனிசை மழை பொழிய

தென்பொதிகைச் சந்தனமாய்க் கமழ்ந்தாள்!-என்

சிந்தனையைத்தான் கவர்ந்து நின்றாள்!

கவர்ந்து நின்றாள்!

மன்றமதில் முகம் ஒளிர மண்ணுலகில் இருள் விலக

மங்கை அவள் ஊர்வலமாய் வந்தாள்!-என்

மனமதிலே உளம் கனிந்து நின்றாள்!

கனிந்து நின்றாள்!

விண்ணுலகு விழி அகல வெண்ணிலவு நடை பயில

பொன்மகளே பூமணக்க வந்தாள்!-இந்தப்

பூமியதை அரவணைத்து நின்றாள்!

அணைத்து நின்றாள்!

நீலவான் உடை விலக நிலவதன் முகம் மலர

நிலமைகளைக் கண்டு நாணி நின்றாள்!-பிறர்

நெஞ்சமதில் தான் நிறைந்து நின்றாள்!

நிறைந்து நின்றாள்!

(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *