தேன்மலர்கள் இதழ் விரிய! தென்றலது மணம் சொரிய!
தேவதை என் எதிரில் வந்து நின்றாள்!-நறுந்
தேன்மொழியால் எனைக் கவர்ந்து சென்றாள்!
கவர்ந்து சென்றாள்!
வஞ்சிஇடைக் கொடிஅசைய! வனிதை நடைதளர!
அஞ்சி அஞ்சி அருகில் வந்து நின்றாள்!-அந்த
ஆரணங்கு என் இதயம் கொய்தாள்!
இதயம் கொய்தாள்!
கண்ணசைவு கவிதை சொல்ல! காலடியில் நடந்து மெல்ல!
கஞ்சமகள் எனை நெருங்கி வந்தாள்!-நற்
காரிகை என் அருகில் வந்து நின்றாள்!
வந்து நின்றாள்!
பூவையவள் கண் மலர! பூம்பொழிலில் பூ அலர!
பொன்மகளே தலை குனிந்து வந்தாள்!-தென்
பொதிகை வளர் தென்றலென நின்றாள்!
வந்து நின்றாள்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply