சோலை மலரொன்று எனைக்கண்டு சிரிக்கும்! சோகம் பரவாத மனம் ஒன்று நினைக்கும்! வாழும் நாள் என்னை வரவேற்கத் துடிக்கும்! வைகைக் கரையோரம் தரு ஒன்று முளைக்கும்! (சோலை) மாலை எந்நாளும் மயங்காது இங்கே! மானும் இருள் கண்டு கலங்காது இங்கே! நாளும் நல்லோர்கள் தான் இங்கு வருவர்! நாளை நமதென்று நன்றே செய்திடுவர்! (சோலை) பாடும் பூபாளம் பாரெங்கும் ஒலிக்கும்! ஓடும் நதியெங்கும் என் கானம் இசைக்கும்! காடும் மலை மண்ணும் வான் உள்ள வரைக்கும் ஞாலம்…
ஏரின் முனையைப் பேனாவாக்கி ஈரமண்ணைக் காகிதமாக்கி உழவர் எழுதும் அழகிய மொழியே! வறுமை ஓடும் பின்புற வழியே! உழுது மண்ணைப் பண்படுத்த உறையும் புழுவும் பூச்சிகளும் பறவைக்கங்கே உணவாகும்! பாடும் ராகம் நமதாகும்! விதையை மண்ணில் விதைத்த பின்னே விதைக்குத் தண்ணீர் உணவூட்ட இலைகள் அசைந்து செடி வளரும்! இனிய சூழல் உருவாகும்! பூத்து சிரிக்கும் நெல்மணிகள்! புலரும் ஆங்கே நல் அரிசி! மனிதர்க்கிங்கே உணவாகும்! மலரும் ஆங்கே புது உறவு! நெல்லின் உமியே உணவாக! நிதமும்…