வைரிசெட்டிப்பாளையம் மண்ணுல நாம் பொறந்ததால

வம்புதும்பு பண்ணமாட்டோம்!-நாங்க

வளமாக எந்நாளும் வாழ்ந்து காட்டுவோம்!

வந்தாரை வரவேற்று வகையான வழிவகுத்து

வளமாக வாழ்ந்திடவே வாழ்த்துக் கூறுவோம்!

மாருதில போனாலும் மாடு ஓட்டுவோம்!-நாங்க

மாஸ்டர் டிகிரி வாங்கினாலும் ஏரு பூட்டுவோம்!

அமெரிக்காவில் படிச்சாலும் ஐ.ஏ.எஸ்சே ஆனாலும்

அரிவாளை கையிலெடுத்து நெல்லு அறுப்போம்!-நாங்க

அநியாயமா எதுவும் செய்யமாட்டோம்!

கொல்லிமலை அடிவாரம் குட்டையிலே எலந்தப் பழம்

கூடையிலே பொருக்கி வந்து கூடி ருசிப்போம்!-நாங்க

கோடையிலே படிச்சாலும் கோட்டு சூட்டு போட்டாலும்

கொல்லங்குடி பாட்டையுமே கேட்டு ரசிப்போம்!-நம்ம

கல்லுவெட்டி சாமியையே வேண்டி இருப்போம்!

எங்க ஊரு ஏரியிலே எதிர்நீச்சல் போட்டதாலே

வங்கக்கடல் நீரிலேயும் நீச்சலடிப்போம்!-அங்கே

பொங்கிவரும் அலைகளையும் எதிர்த்து நீந்துவோம்!

தங்கச் சம்பா நெல்விளையும் எங்க வயலிலே-மாட்டுப்

பொங்கலிட்டே மகிழ்ந்திருப்போம் எந்த நாளுமே!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *