மலைமீது வளர்கின்ற பொழில்சோலை கண்டேன்! -அதன்
மாறாத எழிற்கோலம் தனைக்கண்டு நின்றேன்!
வனம் இல்லாமல் புவிமீது உயிர் ஒன்றும் இல்லை! -அதன்
வளம் இன்றி யாரெவரும் உய்த்திடுதல் இல்லை!
பனிமலராடும் ஓடையிலே உறுமீன்கள் ஆட-அதன்
பாங்கான உருகண்டு பறவையதும் ஓட
பசுந்தளிர்க் கொடியும் இளவெயிலில் தானாக வாட-நனி
பகலவனும் வான்மீது தேரேறி வந்தான்!
பசும் பட்டாடை அதுவாகக் குளிர்சோலை மாற -அதன்
பகட்டான அழகாலே பல்லுயிரும் பேண
பகையின்றி உறவாடும் உயிர்களதும் நாண-மிகு
பாசம் நிறை உயிர்களுமே பண்பாடும் நாளும்!
(நான் மலரோடு தனியாக-பாடல் மெட்டு)

Leave a Reply