மண்ணுயிர் காக்கும் மழையதன் அருமை
மாந்தரும் அறியவில்லை!-நம்
கண்ணெனப் போற்றும் நீரதன் பெருமை
கற்றவர் தெரியவில்லை!
மழையதும் வீழ்ந்து பூமியின் மேலே
நிறைந்தே இருந்தாலும்-அது
பொழிகின்ற இடமே புரிந்திடும் நலமே
பூமியில் உயிர்களுக்கே!
உயிர்நீர் அதுவாய் உயிர்களைக் காத்து
உதவிகள் புரிந்தாலும்-அதன்
உன்னதம் அறியா மானிடர் அவரே
உண்மை உணரவில்லை!
அமிழ்தென விளங்கி அவனியைக் காத்து
அணியெனத் திகழ்ந்தாலும்-நீர்
அரிதென ஆக அதன் அரும் பெருமை
அகிலம் உணர்ந்திடுமே!
(நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்-பாடல் மெட்டு)

Leave a Reply