மேகமே முழவதை முழங்க!-வண்ண
மின்னலின் நர்த்தனம் விண்ணிலே விளங்க!
தவளைகள் தாளம் இசைக்க!-இந்தத்
தரணியிதும் தழைத்திட பெய்திடும் மழையே!
உயிர்கட்கு உயிர்நீர் வழங்கி!-உலக
உயிர்களின் வாழ்விலே அமிழ்தென விளங்கி!
நதி ஆறு கடல் என்று பரவி!-இந்த
நாட்டிலே நன்மையே புரிந்திடும் மழையே!
நீரதனைப் பூசனை செய்து!-அதன்
நிலையினைக் காத்திட நேர்ந்திடும் நலமே!
நிறம் மணம் சுவை ஒன்றும் இன்றி!-இந்த
நீநிலம் நிலைத்திடப் பெய்திடும் மழையே!
மண்ணுயிர்கள் மனமதும் மகிழ!-உயர்
விண்ணின்று பொழிந்தே விந்தைகள் புரியும்!
மாரியாய் வாரி வழங்கி!-இந்த
மண்ணிலே பொன்னதை விளைத்திடும் மழையே!
(கல்லிலே கலை வண்ணம் கண்டான்-பாடல் மெட்டு)

Leave a Reply