மணிநீரும் மண்மீது உயிராகிட-மா

மழை பொழிய வனம் அதனின் துணை நாடினோம்!

கனிகொஞ்சும் பசுஞ்சோலை தனைக் காத்திட-அதன்

கருணையதால் உயிர்களுக்கு உணவாகுமே!

மருந்தாகி வளியாகி மண் காத்திடும்-இந்த

மாநிலத்தின் உயிர்களதைத்தான் காத்திடும்!

மலர் போன்ற மனம் கொண்ட மரம் காத்திட-நல்

மகிமையதால் மன்பதையில் வளம் பேணிடும்!

பெய்கின்ற மழைநீரைத் தான் பேணியே-இந்தப்

பேருலகைப் புறந்தருளும் வனமே அன்றோ!

பெருமைகள் பல சேர்க்கும் வகையால்-நனி

பெரிதினிது பயத்திருக்கும் குணமே அன்றோ!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *