வாழை மரம் இருக்கு வாய்க்காலில் நீர் இருக்கு

வயல் உழுது பயிர் நடுவோம் பொன்னம்மா!-அது

வளர்ந்து நெல்லு மணி வழங்கும் பொன்னம்மா!

பொன்னம்மா! நீஎன் கண் அம்மா!

எருது மாடிருக்கு ஏர்க்கலப்பை வசம் இருக்கு

ஏர் உழுது நெல் நடுவோம் பொன்னம்மா!-அது

ஏற்றமுடன் விளைந்திடுமே பொன்னம்மா!

பொன்னம்மா! நீஎன் கண் அம்மா!

உடம்பில் தெம்பிருக்கு ஊக்கமதும் நெறஞ்சிருக்கு

ஊரார் பசியாற பொன்னம்மா!-நாம்

உணவதையே வழங்கிடுவோம் பொன்னம்மா!

பொன்னம்மா! நீஎன் கண் அம்மா!

தென்னை மரம் இருக்கு தேகமிதில் பலமிருக்கு

தேசமிதைக் காத்திடுவோம் பொன்னம்மா!-பிறர்

தேவையதை நிறைத்திடுவோம் பொன்னம்மா!

பொன்னம்மா! நீ என் கண் அம்மா!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *