காலை இளந்தென்றல் சொல்லும் சேதி என்னவோ!

நான்கு திசையிலும் நாங்கள் பிரிந்ததென்ன!

நாளை வரும் நல்ல நாள் என்று நானுமே

வாடி இருப்பதென்ன!-(காலை)

காலம் அது செய்த சோகமோ! இது துரோகமோ!

கண்கள் பனிக்கின்ற நேரமோ! இது மாறுமோ!

தேகம் அது செய்த வேள்வியோ! இது கேள்வியோ!

மேகம் மழை தரக் கூடுமோ! இது நாடுமோ!-(காலை)

பிரிவால் வாடிடும் பேதையர் எம் நெஞ்சைத் தேற்றிட!

அறிவாலே அதும் ஆகுமோ! அல்லல் துயரதும் தீருமோ!

பெற்று வளர்த்திட்ட பாசம் அது நெஞ்சில் மோதுதே!

பேணித் தழுவிட ஆசையினால் உளம் ஏங்குதே!-(காலை)

வாழும் பொழுதினில் வாதையினால் உளம் வாடவோ!

வாழ்க்கையிலே வந்து சேர்ந்திட நன்மையே கூடுமோ!

காலம் இதுவுமே நாள்படவே முறை மாறுமோ!

கருணையினால் நிலை மாறிடவே நலம் சேருமோ!-(காலை)

(வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *