கண்ணில் கருணை வரும்!
கனிந்திடவே உளம் உருகும்!
மண்ணில் பொன் விளையும்!
மங்கலமே நிறைந்திலங்கும்!
எங்கள் பூமியிது ஏர்த்தொழிலால் சீர்பெருகும்!
இன்பம் பொங்கிடுமே நாளுமே!-அதை
இதயம் தனில் உவந்து வணங்குவோம்!
முல்லை மலர் மலரும்!
முப்போகம் நெல் வளரும்!
முகிலும் மழை சொரியும்!
முகமதுவே நகை புரியும்!
பொங்கும் பூமியிது பொன்விளைத்து நலம்பயக்கும்!
பொழியும் நன்மை அதே நாளுமே!-அதைப்
போற்றி மனம் உருகி வணங்குவோம்!
தென்றல் தூது விடும்!
தெம்மாங்கு இசை பயிலும்!
தேகம் உடல் நனையும்!
தேன்சிட்டு துணை இணையும்!
செழித்திடும் பூமியிது செந்நெல்லால் வளம்குவிக்கும்!
சிறந்தே திகழ்ந்திடுமே நாளுமே!-அதை
சிந்தையிலே தாங்கி தினம் வணங்குவோம்!

Leave a Reply