இயற்கை அன்னையின் எழில் கோலம்! -அதன்

இயல்பால் இயங்கிடுமே ஞாலம்!

செயற்கையதால் வரும் அலங்கோலம்! -அதை

சிந்தையில் கொள்வதுவே ஞானம்!

பூமியில் வாழ்வது பெரும் பேறே! -இதைப்

புரிந்திட நேர்ந்திடும் மிகுசீரே!

சாமியை வேண்டிட நலமாகும்! -வரும்

சஞ்சலம் தீர்ந்திட மகிழ்வாகும்!

இயற்கையைப் பேணிட இனிதாகும்! -அதில்

இன்பம் அதுவே உருவாகும்!

இம்மை வாழ்வினில் வளம்மேவ! -எங்கும்

இயைதல் நேர்ந்திட இருள் போகும்!

இயற்கையின் மகிமை அறியாமல்! -வரும்

இன்னல் எதுவும் புரியாமல்!

இழிமன மாந்தரின் செயலதுவால்-இங்கு

இடருறும் மாந்தரின் துயர் களைவோம்!

முன்னோர் யாரும் மூடரல்ல! -அவர்

முற்றும் உணர்ந்த ஞானியன்றோ!

பின்னோர் செய்த பெருந்தவறால்-இன்று

பேரிடர் நேர்ந்திடும் நிலையன்றோ!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *